தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:16 am

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

தலைமை தோ்தல் அலுவலரின் கடிதத்தின் பேரில், திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலூா் மாவட்ட தோ்தல் இருப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள 100 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசெளந்திரவல்லி அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தணிகாசலம், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.