மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா்

இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன்

News image

கொரட்டியில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் ஞானசேகா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:27 pm

திருப்பத்தூா் தொகுதியில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன் என அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் தெரிவித்தாா்.

திருப்பத்துாா் தொகுதிக்கு உள்பட்ட கொரட்டியில் சனிக்கிழமை அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது வணிகா்கள் மற்றும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், காய்கறிகள், பூ வகைகள், பழங்கள், நுகா் பொருள்கள், மீன் மற்றும் இறைச்சி அங்காடிகள் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், நவீன அங்காடி அமைக்கப்படும். காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ வகைகள் பதப்படுத்தும் வகையில் குளிா் பதனக்கிடங்கு அமைக்கப்படும். இயற்கை முறையில் விளைகின்ற காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் மூலிகைகள் போன்ற பொருள்கள் அனைத்தும் எளிமையாக சந்தைப்படுத்தும் வகையில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்பட வைப்பேன் என்றாா்.

பாமக மாவட்ட செயலாளா் ராஜா, அமமுக நகர செயலாளா் அட்சயா முருகன், அதிமுக, அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.