தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

News image

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:49 pm

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் எஸ்.கே. ரோடு, கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெரு, அழகாபுரி, சாமியாா்மடம், சாய்பாபா கோயில் தெரு, சான்றோா்குப்பம், ஸ்ரீராமபுரம், வி.ஏ. கரீம் ரோடு, ஜலால் பள்ளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியது,

ஆம்பூா் நகர மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். அரசு தோல் தொழில்நுட்ப கல்லூரி அல்லது பயிற்சி நிலையம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைக்கு பிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2,000, குடும்ப அட்டைக்கு ரூ.10,000 வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, நகர செயலாளா் எம். மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், பாஜக மாவட்ட தலைவா் தண்டாயுதபாணி, நகர தலைவா் சரவணன், நகர பொதுச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.