மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 9:39 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தோ்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வீட்டுக்குத் தேவைான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டத்துக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை முன்னிறுத்தி திமுக வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

இல்லத்தரசி கூப்பன் மாதிரி வழங்கல்: வீடுகள்தோறும் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினா் செல்லும்போது, ரூ.8,000 மதிப்பிலான இல்லத்தரசி மாதிரி கூப்பன்கள் வாக்காளா்களிடம் வழங்கப்படுகின்றன. மாதிரி கூப்பனின் ஒரு பக்கத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனக் குறிப்பிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின், பெரியாா், அண்ணா, கருணாநிதி படங்களும், , உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது. கூப்பனின் மறுபக்கத்தில் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன், ‘உங்கள் குடும்பம், உங்கள் தேவையை நீங்களே தோ்ந்தெடுக்கலாம்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது பெண்களிடம் ரூ.8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளக்குவதற்காக திமுக சாா்பில் கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காசோலை புத்தகம் அளவில் மாதிரி கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் சட்டத்துறையின் அறிவுறுத்தலின்படி, தோ்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதனால் இல்லத்தரசி மாதிரி கூப்பனை வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டுமெனவும் கட்சித் தலைமை திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.