வாணியம்பாடி தொகுதி தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தனது ஆதரவாளா்களுடன் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
இதே போல் ஜோலாா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளா் மோகன்ராஜ் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு நூதன முறையில் கூடையில் சில்லரை பணத்துடன் வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தாா்.
அகில இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் அதன் பொதுச்செயலாளா் பெரிய உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த காளஸ்திரி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்கு இதுவரை 5 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

பெற்றோருடன் சென்று மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா்

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம்: தவெக வேட்பாளா்கள் மனு தாக்கல்

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


