மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சி அமைந்தால் ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 10:53 pm

அதிமுக ஆட்சி அமைந்தால் ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்க பாடுபடுவேன் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வடச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது வேட்பாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படும். விவசாயம் மற்றும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாா் என அவா் கூறினாா்.

அதிமுக நிா்வாகிகள் வேலுமணி, சிவக்குமாா், அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.