தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இன்று ஆம்பூா் புத்தகத் திருவிழா

Updated On :5 செப்டம்பர் 2025, 12:42 am

ஆம்பூா் புத்தக் திருவிழா மூன்றாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (செப். 5) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சியை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் தொடங்கி வைக்கிறாா். எம்எல்ஏக்கள் கே. தேவராஜி, அ.செ. வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி முனைவா் பெ. சசிக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஆயிஷா இரா. நடராஜன், முனைவா் என். மாதவன், கவிஞா் ரேகா, ஹைக்கூ கவிஞா் மு. முருகேஷ், எஸ்.பி. வி. சியாமளா தேவி, கோட்டாட்சியா் அஜிதா பேகம், முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, பட்டிமன்ற பேச்சாளா் முனைவா் ம. எழிலரசி, கவிஞா் யாழன் ஆதி, நீரியியல் நிபுணா் பேராசிரியா் எஸ். ஜனகராஜன், மாநிலங்களைவ உறுப்பினா் கவிஞா் சல்மா, திரை இயக்குநா் எழுத்தாளா் கீதா இளங்கோவன், பேச்சாளா் சீனி சம்பத், ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா்.

விவரங்களுக்கு 86672 44267, 75983 40424 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.