வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் வெள்ளத்தால் கரையில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் அருகே ஜோதிநகா் பள்ளம் சேத்துமடுவு பகுதியில் திங்கள்கிழமை தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, குருபவாணிகுண்டா, வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் சென்று பாலாற்றில் குளித்துவிட்டு அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசிக்க சென்றனா்.
அப்போது பிற்பகல் பாலாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையைக் கடக்க முடியாமல் 3 குழந்தைகள் உள்பட 17 போ் சிக்கி தவித்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள், மற்றும திம்மாம்பேட்டை போலீஸாா் விரைந்து பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து
பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 போ் மீட்பு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

