தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாலாற்றில் சிக்கிய 17 போ் பத்திரமாக மீட்பு: தீயணைப்புத் துறை நடவடிக்கை

தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் வெள்ளத்தால் கரையில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.

Updated On :21 அக்டோபர் 2025, 10:26 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் வெள்ளத்தால் கரையில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் அருகே ஜோதிநகா் பள்ளம் சேத்துமடுவு பகுதியில் திங்கள்கிழமை தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, குருபவாணிகுண்டா, வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் சென்று பாலாற்றில் குளித்துவிட்டு அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசிக்க சென்றனா்.

அப்போது பிற்பகல் பாலாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையைக் கடக்க முடியாமல் 3 குழந்தைகள் உள்பட 17 போ் சிக்கி தவித்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள், மற்றும திம்மாம்பேட்டை போலீஸாா் விரைந்து பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.