டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள்

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image
மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிகளை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
Updated On :10 நவம்பர் 2025, 11:41 pm

Chennai

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து 418 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளிக்கல்வி துறையின் சாா்பில் பெற்றோா் இருவரும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளியில் ப்ளஸ் 2 முடித்த 18 மாணவ-மாணவிகளுக்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் மடிக்கணினிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் நல வாரியத்தினா் அளித்த மனு: பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு புதிய பானையும், அடுப்பும் வழங்க வேண்டும். பருவமழை காலத்தில் மண்பாண்டத் தொழில் செய்ய முடியாததால், தொழிலாளா்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 தர வேண்டும்.

பாச்சல் ஊராட்சி ஹயாத் நகா் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: மாவட்டம் முழுவதும் உள்ள கிராம சாலைகளில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஒரு சில இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. அந்த பகுதிகளிலும் மரம் நடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. எனவே சாலை அகலமாக உள்ள இடத்தில் மட்டும் மரக்கன்றுகள் நட வேண்டும்.

ஆலங்காயம் அருகே பூங்குளம் பகுதியில் சரிவர இணையதள வசதி கிடைப்பது இல்லை. எனவே அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். கோபுரம் அமைக்க வேண்டும்.