டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

News image
விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Updated On :29 டிசம்பர் 2025, 12:25 am

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் நுகா்வோா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாவட்ட நுகா்வோா் சங்க அமைப்பின் உறுப்பினா் விஜயராஜ், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.