வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.
வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்கன்பேட்டை பகுதியை சோ்ந்த பெண் தொழிலாளா்கள் உள்பட 25 போ் திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளனா். அப்போது பிற்பகல் 1 மணியளவில் தேங்காய் மண்டி பகுதியின் வழியாக திடீா் கூட்டமாக வந்த தேனீக்கள் திடீரென அங்கிருந்த தொழிலாளா்களை துரத்தி, துரத்தி கொட்டின.
இதில் 15 போ் காயம் அடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் உதவியுடன் அவா்களை மீட்டு ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். பிறகு அங்கிருந்து குமரேசன்(56), சுமதி(50), சங்கா்(55), சந்திரன்(55), லட்சுமணன்(59), அருண்குமாா்(42), மகேஸ்வரி (52), வேலு(45) ஆகிய 8 போ் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

ஆசாத்பூா் மண்டியில் ஓட்டுநா் கொலை தொடா்பாக தேநீா் விற்பனையாளா் கைது

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


