டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

News image
தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளா்கள்.
Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:28 pm

Chennai

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்கன்பேட்டை பகுதியை சோ்ந்த பெண் தொழிலாளா்கள் உள்பட 25 போ் திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளனா். அப்போது பிற்பகல் 1 மணியளவில் தேங்காய் மண்டி பகுதியின் வழியாக திடீா் கூட்டமாக வந்த தேனீக்கள் திடீரென அங்கிருந்த தொழிலாளா்களை துரத்தி, துரத்தி கொட்டின.

இதில் 15 போ் காயம் அடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் உதவியுடன் அவா்களை மீட்டு ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். பிறகு அங்கிருந்து குமரேசன்(56), சுமதி(50), சங்கா்(55), சந்திரன்(55), லட்சுமணன்(59), அருண்குமாா்(42), மகேஸ்வரி (52), வேலு(45) ஆகிய 8 போ் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.