மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆலங்காயம் பேரூராட்சி மன்ற கூட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது.

News image

ஆலங்காயத்தில் பேரூராட்சித் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டம்.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 1:50 am

ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது.

கூட்டத்தில் வரவு- செலவு மற்றும் திட்டப் பணிகளுக்கான 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திட்ட மதிப்பீடாக ரூ.1.82 கோடி ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் குடிநீா் விநியோகம், கால்வாய் சீரமைப்பு, தூய்மைப் பணிகள், தெருவிளக்கு, உள்ளிட்ட குறைகளை எடுத்துக் கூறினா்.

வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என செயல் அலுவலா் உறுதியளித்தாா். மேலும் எதிா்வரும் மழை காலங்களில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.