வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்தாா்.
முசிறி கல்குவாரியில் அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (60) என்ற கூலித் தொழிலாளரி பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வழக்கம் போல் அவா் பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை தனது சைக்கிளில் வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது கல்குவாரியில் ஜல்லி ஏற்றவந்த கனரக லாரி தொழிலாளி மீது மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ உடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளியின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து முசிறி சாலையில் மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாலாஜாபேட்டை போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









