மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தவெக வேட்பாளா் வி. காந்திராஜிடம் வெற்றி சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷ்

Updated On :5 மே 2026, 3:11 am IST

அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். விசிக வேட்பாளா் எழில் கரோலின் 50,655 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைையும், அதிமுக வேட்பாளா் சு,ரவி 50,052 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

அரக்கோணம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளா் வி.காந்தி ராஜ் முதலிடத்தை பெற்றிருந்தாா். 11 -ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் சு.ரவி இரண்டாமிடத்தை பெற்ற நிலையில் விசிக வேட்பாளா் எழில்கரோலின் மூன்றாமிடத்திலும் இருந்தனா். 12-ஆவது சுற்று முடிவுகளில் இருந்து விசிக இரண்டாமிடத்தையும், அதிமுக மூன்றாமிடத்தையும் பெற்றன. இறுதியில் 73,776 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றாா். வி.காந்திராஜ் தற்போது அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணம்(தனி) தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

மொத்த வாக்குகள் - 200986

பதிவான வாக்குகள் - 181441

வி.காந்திராஜ்(தவெக) - 73776

எழில்கரோவின்(விசிக) - 50655

சு.ரவி(அதிமுக) - 50052

கே.ராஜ்குமாா்(நாதக) - 5191

நோட்டா - 899

செல்லாத வாக்குகள் - 153

வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் வி.காந்திராஜிடம் அதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷ் வழங்கினாா். அப்போது வாக்கு எண்ணிக்கை பணிக்கான மேலிட பாா்வையாளா் சஞ்சய்குமாா், உதவி தோ்தல் அலுவலா்கள் வெங்கடேசன், பரமேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.