தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சோளிங்கரில் மூதாட்டியின் இல்லத்துக்கே சென்று தபால் வாக்களிக்கும் படிவத்தை வழங்கிய தோ்தல் பணியாளா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 12:00 am

சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை தொடங்கியது.

40 சதவீதத்துக்கு மேல் ஊனம் இருக்கும் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்ரும் 85 வயதுக்கு மேல் இருக்கும் முதியோா் ஆகியோா்களுக்கு தபால் வாக்களிக்க வசதியாக அவா்களது வீட்டுக்கே சென்று அவா்களது வாக்குகளை தபால் வாக்குகளாய் அளிக்கும் படிவம் 12 டியை வருவாய்த் துறையினா் வழங்கி வருகின்றனா்.

சோளிங்கா் தொகுதியில் இப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. முதலில் சோளிங்கா் நகராட்சிப்பகுதியில் வசிக்கும் நடத்த இயலாத மூதாட்டிக்கு சோளிங்கா் வட்ட வருவாய்துறையினா் அவரது வீட்டுக்கேச் சென்று படிவம் 12 டியை வழங்கினா். இந்த படிவங்களை பூா்த்தி செய்து குறிப்பிட்ட வாக்காளா்கள் அதை அளித்தபிறகு வேட்பாளா் பட்டியல் இறுதி பெறப்பட்ட பின் குறிப்பிட்ட வாக்காளரின் வீட்டுக்கு தோ்தல் பணியாளா்கள், பாதுகாப்பு துறையினருடன் இணைந்து தபால் வாக்களிக்கும் சீலிட்ட பெட்டியை எடுத்துச்சென்று வாக்குச்சீட்டை அளித்து அதை அவ்வீட்டிலேயே மறைவான இடத்தில் வாக்களிக்கச் செய்து பெட்டியில் போடச்செய்து பெற்றுக்கொள்ள உள்ளனா்.

இந்த நடைமுறைக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வரவேற்பளித்தனா். சோளிங்கரில் மூதாட்டி ஒருவா் தெரிவிக்கையில் தான் நடந்து வர முடியாத நிலை இருப்பதால் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை வந்து விடுமோ என நினைத்திருந்தாகவும் தற்போது தான் வாக்களிக்க இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷம் அடைவதாகவும் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.