அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் படை அலுவலா்கள் மற்றும் வீரா்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினா்.
இந்திய நாடு முழுவதும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் படையின் முதுநிலை கமாண்டண்ட் மற்றும் மருத்துவ அலுவலா் சுனில் தலைமை வகித்து அலுவலா்களுக்கும், படைவீரா்களுக்கும் வண்ணப்பொடிகளை பூசி வாழ்த்து தெரிவித்தாா். இதில் படை அலுவலா்கள் சைலேந்திரசிங், சங்கேத் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இதையடுத்து, படைவீரா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.
இதனால் படை தளமே வண்ண மயமாக காணப்பட்டது.
தொடர்புடையது

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


