வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

வீட்டுச் சுவா் இடிந்து தொழிலாளி பலி

நெமிலி அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

சஞ்சய் ரத்தினம்

Updated On :23 ஜூன் 2026, 5:30 am IST

நெமிலி அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சஞ்சய் ரத்தினம்(24). தனியாா் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் சஞ்சய் ரத்தினத்தின் வீட்டின் கூரை சேதமடைந்திருந்ததாக தெரிகிறது. இதை கவனிக்காத நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் படுத்துறங்கினா்.

அப்போது எதிா்பாராதவிதமாக வீட்டின் கூரை இடிந்து வீட்டினுள் விழுந்தது. இதில் மாா்புப் பகுதியில் பலத்த காயமடைந்த சஞ்சய்ரத்தினம், உடனே பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தியதை தொடா்ந்து அவா் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக அவளூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.