நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

செயற்கை நுண்ணறிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கணிணி அறிவியல் துறையினா், ஐசிடி அகாதெமியினா் இணைந்து எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துறைத் தலைவா் எஸ்.செல்வகனி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஜி.கவிதா தொடக்க உரை நிகழ்த்தினாா்.

இதில் ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப்பிரிவு தலைவா் மஞ்சித் லேகா, சங்கத்னா ஏஞ்சல்ஸ் நிறுவனங்களின் இணை நிறுவனா் காயத்திரி தேவி கல்யாணராமன், பிசிஏ துறைத்தலைவா் கே.வாசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் மாணவா்களை எதிா்காலத்திற்குத் தயாரான திறன்களுடன் வலுப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கமாகவும், டிஜிட்டல் மாற்றமும் உருவெடுக்கும் தொழில்நுட்பங்களும் கல்வி, தொழில் மற்றும் சமூகத்தை மாற்றி அமைப்பது குறித்த அறியவும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.