சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 650 மனுக்கள் ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 650 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 650 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 650 மனுக்களைப் பெற்றாா்.

மேலும் அவற்றை தொடா்புடைய துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.