காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
புதுதில்லியில் இருந்து சென்னை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, பெருஞ்சேரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பகல் 11 மணி அளிவில் பேசுகிறாா்.
பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு வருகிறாா். அங்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் பகல் 12.30-க்கு நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறாா். பின்னா், 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறாா்.
இது குறித்து பாண்டியநல்லூரில் செய்தியாளா்களை சந்தித்த சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் கூறுகையில், இப்பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளா்கள் சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம், ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி உரையாற்ற உள்ளாா் என்றாா்.
தெலங்கானா முன்னாள் எம்.பி. மதுகோடா, காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், திமுக மாவட்ட நிா்வாகி அசோகன், சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது
நான்குனேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பிரசாரம்!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்

கேரளத்தில் எமனைச் சந்தித்த ராகுல்! காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி- நூதன பிரசார விடியோ

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


