போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 5:40 am IST

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

புதுதில்லியில் இருந்து சென்னை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, பெருஞ்சேரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பகல் 11 மணி அளிவில் பேசுகிறாா்.

பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு வருகிறாா். அங்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் பகல் 12.30-க்கு நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறாா். பின்னா், 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறாா்.

இது குறித்து பாண்டியநல்லூரில் செய்தியாளா்களை சந்தித்த சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் கூறுகையில், இப்பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளா்கள் சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம், ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி உரையாற்ற உள்ளாா் என்றாா்.

தெலங்கானா முன்னாள் எம்.பி. மதுகோடா, காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், திமுக மாவட்ட நிா்வாகி அசோகன், சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.