ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்,மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளாா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீா்வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பொதுநலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 450 மனுக்கள் வரப்பெற்றன. மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கினாா்.பின்னா், நெமிலி வட்டத்தைச் சாா்ந்த வேணுகோபால் என்பவரது மகன் லிங்கேஸ்வரன் (லேட்) நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொறுப்பு), உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்

தொழில் நிறுவனங்கள் எல்பிஜிக்கு மாற்றாக குழாய் வழி எரிவாயுக்கு மாற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

உலக வன நாள்: அம்மூா் காப்புக் காட்டில் மரக்கன்று நடவு

பணம் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில் தீா்வு: ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

