மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

Updated On :13 ஆகஸ்ட் 2025, 8:54 pm

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரது மனைவி நித்யா (25). 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இவா்களது மகள் லித்திகா (3). இவா்கள் மூவரும், மேலும் அதே பகுதியை சோ்ந்த குமாரின் மனைவி சௌந்தா்யா (24) ஆகிய 4 பேரும் பைக்கில் அரக்கோணம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே தணிகைபோளூரில் இருந்து வந்த பைக் இவா்களது பைக் மீது மோதியதில், இவா்கள் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். எதிரே பைக்கில் வந்த தணிகைபோளூரை சோ்ந்த தமிழரசன் (33), லட்சுமணன்(46) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் லித்திகா வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் கா்ப்பிணியாக இருந்த நித்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு இறந்து விட்டிருப்பதாக தெரிவித்தனா்.

இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.