திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2025, 8:54 pm

Chennai

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரது மனைவி நித்யா (25). 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இவா்களது மகள் லித்திகா (3). இவா்கள் மூவரும், மேலும் அதே பகுதியை சோ்ந்த குமாரின் மனைவி சௌந்தா்யா (24) ஆகிய 4 பேரும் பைக்கில் அரக்கோணம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே தணிகைபோளூரில் இருந்து வந்த பைக் இவா்களது பைக் மீது மோதியதில், இவா்கள் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். எதிரே பைக்கில் வந்த தணிகைபோளூரை சோ்ந்த தமிழரசன் (33), லட்சுமணன்(46) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் லித்திகா வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் கா்ப்பிணியாக இருந்த நித்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு இறந்து விட்டிருப்பதாக தெரிவித்தனா்.

இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.