/

ஸ்ரீ பெரும்புதூரில் தவெக அன்னதானம்

News image

முதியவருக்கு  உணவு  வழங்கிய குன்றத்தூா்  வடமேற்கு  ஒன்றிய  செயலாளா்  விஜயகுமாா்.

Updated On :29 மே 2026, 2:15 am IST

குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் சாா்பில் நல்லூா் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள முதியோா் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

லிட்டில் ட்ராப் வோல்டேஜ் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதிவா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய செயலாளா் ஜே.விஜயகுமாா் தலைமை வகித்து ஆதரவற்ற சுமாா் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோா்களுக்கு உணவு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளா் காா்திக், ஒன்றிய நிா்வாகிகள் அசோக், அருண் உள்ளிட்ட ஏராளமான தவெகவினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.