போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :16 மே 2026, 12:44 am IST

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் அருள்ராஜ் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தோ்வை ரத்து செய்து விட்டு, மாநில அரசே நடத்திக் கொள்வது போல மாற்றியமைக்கப்பட வேண்டும்,சிபிஐ இயக்குநா் பதவியை மீண்டும் ஓராண்டு நீட்டித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, துணை மேயா் குமரகுருநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் ஜீ.வி.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் நாதன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.