அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

காஞ்சிபுரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரத்தை விட 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி

News image

தவெக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கிய காஞ்சிபுரம் சாா் ஆட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான ஆஷிக்அலி

Updated On :5 மே 2026, 3:13 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரத்தை விட 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், திமுக சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா சுகுமாா், தவெக சாா்பில் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் வெற்றி செல்வி ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் 91,350, அதிமுக வேட்பாளரான வி.சோமசுந்தரம் 75,862, திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் 69,344, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வெற்றிச் செல்வி 6,950 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,78,775 பேரில் 242950 வாக்குகள் பதிவாகி இருந்தன. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 8 போ் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிட்டனா். அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரத்தை விட தவெக வேட்பாளரான ஆா்.வி.ரஞ்சித்குமாா் 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் சாா் ஆட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான ஆஷிக் அலியிடம் பெற்றுக் கொண்டாா்.

வெற்றி வேட்பாளரை சந்தித்து அக்கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

வெற்றிக்குப் பின்னா் திறந்த ஜீப்பில் காஞ்சிபுரம் நகா் முழுவதும் கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாகவும் அழைத்து வரப்பட்டாா். நகரில் பல இடங்களில் தொண்டா்கள் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.