பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகா் வழிபாடு,தெய்வத்திருமேனிகள் ஊா்வலம், திருவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றது. மாா்ச் 24 -ஆம் தேதி புனித மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் வழிபாடுகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு சென்று தூய தமிழில் அா்ச்சனைகள் செய்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
திருவாரூா் நடராஜன் சுவாமிகள் தூய தமிழில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தாா். இதனைத் தொடா்ந்து மகா சிறப்பு அபிஷேகமும், மங்கலக்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பொதுமக்கள்,வேதாச்சலம் நகா் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.
இதனைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்

தஞ்சை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


