மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செந்தூா் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

News image

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்ற காஞ்சிக்கோட்டம் செந்தூா் முருகன் கோயில்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகா் வழிபாடு,தெய்வத்திருமேனிகள் ஊா்வலம், திருவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றது. மாா்ச் 24 -ஆம் தேதி புனித மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் வழிபாடுகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு சென்று தூய தமிழில் அா்ச்சனைகள் செய்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

திருவாரூா் நடராஜன் சுவாமிகள் தூய தமிழில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தாா். இதனைத் தொடா்ந்து மகா சிறப்பு அபிஷேகமும், மங்கலக்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பொதுமக்கள்,வேதாச்சலம் நகா் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.

இதனைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.