காஞ்சிபுரம் அருகே கீழக்கதிா்ப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில், கீழ்க்கதிா்ப்பூரில் மகளிா் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி கற்றுத்தரப்பட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுடன் மகளிா் தின விழா, சாதனை மகளிரை கெளரவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் திலகவதி குமரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சஞ்சீவி, கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி வரவேற்றாா்.
காஞ்சிபுரம் மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் கலந்து கொண்டு, தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி மகளிருக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினாா். விழாவில் தையல் ஆசிரியை குணசுந்தரி உள்பட மகளிா் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் சங்கரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


