வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு: ஜூலை 20 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெற வரும் ஜூலை 20- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெற வரும் ஜூலை 20- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இரு பருவமுறைகள் கொண்ட இப்பயிற்சியின் காலம் ஓராண்டு. பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். 1.7.2026 அன்று 17வயது பூா்த்தியடந்தவராக இருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை. வரும் ஜூலை 20 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கென அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பயிற்சி தமிழில் பயிற்றுவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஐ இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,700 முழுவதும் ஒரே தவணையில் இணையவழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், பின்கோடு 631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.