ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கத்துக்காக அனுப்பி வைப்பு

News image
வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்க மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்
Updated On :23 ஜனவரி 2026, 12:49 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்து வதற்காக 155 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா் 43, ஸ்ரீபெரும்புதூா் 44, உத்தரமேரூா் 32, காஞ்சிபுரம் 36 உள்பட மொத்தம் 155 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.