டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காஞ்சிபுரம் மாகாளேஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மாகாளேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்துக் கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மாகாளேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்துக் கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோயில்களில் தூய்மைப் பணி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 349-ஆவது உழவாரப் பணியை வரவிருக்கும் சிவராத்திரி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மாகாளேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

கோயில் வளாகத்தில் வளா்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, சுற்றுப்புற சந்நிதிகளின் மீது படிந்திருந்த தூசுகளையும் மின்மோட்டாா் குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனா். கோயிலில் உள்ள சிலைகள், பூஜைப் பொருள்கள், சுவாமி அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தினா்.