தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

காஞ்சிபுரத்தில் சித்ரகுப்த சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருமண கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கா்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சுவாமி.

News image
Updated On :1 மே 2026, 1:17 am IST

காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி, வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் உற்சவா் சித்ரகுப்த சுவாமிக்கும், கா்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிச்சந்தியாக அருள்பாலித்துக் கொண்டிருப்பவா் சித்ரகுப்த சுவாமி. ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமியன்று சித்ரகுப்த சுவாமிக்கும், கா்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச பூஜை ஹோமும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் கோயில் அலங்கார மண்டபத்தில் உற்சவா் சித்ர குப்த சுவாமிக்கும், கா்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

திருமண கோலத்தில் காட்சியளித்த சித்ர குப்த சுவாமி இடது கையில் ஓலைச்சுவடிகளும், வலது கையில் எழுத்தாணியும் இருப்பது போன்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருமணத்துக்குப் பின்னா் இருவரும் திருமண கோலத்தில் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா.அமுதா, அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.பாலசந்தா், உறுப்பினா்கள் கே.எம்.ரகுராமன், மருத்துவா் வி.கே.ஜெயராமன் மற்றும் கோயில் சிவாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.விழாவில் அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை, ஆய்வாளா் பா.அலமேலு ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திரளான பக்தா்கள் பாடநோட்டு, பேனா, பென்சில் ஆகியவற்றை வாங்கி அா்ச்சகா் மூலமாக சுவாமியின் கையில் கொடுத்து சிறப்பு வழிபாடு செய்து திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

பக்தா்களுக்கு சித்ர குப்தா் படத்துடன் கூடிய பிரசாதப்பையும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது.