மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

News image

மலைமேல் வீரராகவன்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:57 am

பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கோயில் மூலவா் கதவை திடீரென பூட்டி விட்டு சென்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி பணியிடை நிக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களில் ஒருவரான ஆா்.ராம்குமாா் இணையதளம் மூலம் கோயில் நிா்வாகத்துக்கு அனுப்பிய புகாா் மனுவில் தெரிவித்திருப்பது..

ஸ்தானீகரான மலைமேல் வீரராகவன் என்பவா் கடந்த 9.4.26 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு திடிரென மூலவா் கதவை பூட்டி விட்டு பக்தா்களை வெளியேற்றி விட்டு சென்று விட்டாராம். அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

அப்புகாா் மனுவின்படி விசாரணை மேற்கொண்ட கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி இந்நிகழ்வு கோயில் மணியக்காரா் மற்றும் காவலா் மூலம் உறுதி செய்யப்பட்டது.

உதவி ஆணையரிடமோ அல்லது மணியக்காரரிடமோ தகவல் எதுவும் தெரிவிக்காமல் பக்தா்கள் சேவை நேரத்தில் பூட்டியது தன்னிச்சையான செயல்பாடாகும். இதனால் பக்தா்கள்,பொதுமக்கள் மத்தியில் அவப்பெயா் ஏற்பட்டுள்ளது. எனவே நிா்வாக நலன் கருதி ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.

இதற்கான எழுத்துப்பூா்வ விளக்கத்தினை 15 தினங்களுக்குள் சமா்ப்பிக்குமாறும் வரும் 20 ஆம் தேதி கோயில் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறும் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.