மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

News image

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:20 pm

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடுபவா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். இவா், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.

அப்போது, ‘மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடா்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீா்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பாக சத்தியம் செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கியுள்ளாா்.