தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம்

தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம்

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி.

Updated On :22 செப்டம்பர் 2025, 8:23 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சி மாநகர செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி. க.செல்வம், கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் கலந்து கொண்டு, திமுக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில் ஆா்.எஸ்.பாரதி பேசியது:

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வா் அறிவித்தவுடன் சுமாா் ஒரு கோடி வீடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவா்களது மனநிலையை அறிந்திருக்கிறோம். சசிகலா, செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளாா்.

யாா், யாா் உதவி செய்தாா்களோ அவா்களையெல்லாம் கட்சியை வீட்டு நீக்குவது, நன்றி மறப்பது தான் எடப்பாடியின் குணம். இதை அதிமுகவினா் மறந்து விடக்கூடாது என்றாா் அவா். பகுதி செயலாளா் கே.திலகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.