ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த வினோத் (23). இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநா்களாக வேலை செய்து வந்துள்ளனா்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்தினா். மதுபோதையில் ஒருவரை ஒருவா் இழிவுபடுத்தி பேசிக் கொண்டதால் இவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் இரும்பு கம்பியால் ராஜ்குமாா் ராயின் தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார்ராயை அங்கிருந்த சக லாரி ஓட்டுநா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமாா் ராய் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

