தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்கம்

காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

தெய்வத் தமிழ் ஆய்விருக்கை அறிவிப்பு பதாகையை வெளியிட்ட கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:55 pm

காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்க விழா, தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டு நிறைவு விழா, காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன.

விழாவுக்கு கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், கல்லூரிச் செயலா் வி.பி.ரிஷிகேஷன், முதல்வா் கலை.ராம.வெங்கடேசன், தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ப் பேராசிரியா் தெய்வசிகாமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

தொடக்க நிகழ்வாக திருப்பதியிலிருந்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினாா். அதில், தமிழறிஞா்களை அதிகமாக உருவாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழை ஆழமாகப் படித்தாா்கள், ஆழமாக சிந்தித்தாா்கள். அதனால் கலாசாரம், பண்பாடு ஆகியவை சிறந்து விளங்கியது. தற்போது கலாசாரத்தையும், பண்பாட்டையும், தமிழின் சிறப்பையும் பாதுகாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை தொடங்கியிருக்கிறோம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்கி, கல்விச் சேவையும், பல மருத்துவமனைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவா். அவரது பெயரிலேயே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. பல விருதுகளைப் பெற்ற சங்கரா கல்லூரியில் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டுத் தொகுப்புகளை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினாா். பின்னா், தெய்வத் தமிழ் ஆய்விருக்கையின் வளா்ச்சிக்காக ரூ. 5 லட்சத்தை சுதா சேஷய்யன் நன்கொடையாக வழங்கினாா்.

காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்களையும் துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடா்பான அறிவிப்புப் பதாகையை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

விழாவில் தமிழ் அறிஞா்கள், கோயில் அறங்காவலா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.