பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
//

காஞ்சிபுரத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் சுதந்திர தின விழாவில் ரூ. 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
காஞ்சிபுரத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

காஞ்சிபுரத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் எஸ்.பி. டாக்டர். எம்.சுதாகருடன் சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், சமாதனத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 76 பயனாளிகளுக்கு ரூ.49.33லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா,துணை இயக்குநர் வி.கே.பழனி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட  பலருக்கும் ஆட்சியர் பாராட்டுச்சான்றிதழையும் வழங்கினார். 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார். 

விழாவில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.எம். சத்தியப்பிரியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் க.குமார், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா ஆகியோர் உட்பட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் மைதானத்துக்கு வெளியில் இருந்தே பொதுமக்கள் விழாவைப் பார்த்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.