17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அஞ்சலி...

News image

நடிகர் அஜித் குமாரை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் விஜய் - X

Updated On :30 மே 2026, 10:01 pm IST

சென்னை : நடிகர் அஜித் குமாரின் தாயாரது உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (மே 30) இரவில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக இன்று (மே 30) காலை காலமானார். அன்னாரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்த அஜித் குமார் இன்றிரவில் தாயகம் திரும்பி வீட்டுக்குச் சென்றடைந்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் - எக்ஸ்

முன்னதாக, முதல்வர் விஜய் இன்று காலையில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மோகினி மணி உடலுக்கு அஜித் வருகைக்குப் பின் முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Summary

Ajith Kumar's mother demise - Chief Minister Vijay pays homage to the mortal remains of actor Ajith Kumar's mother.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.