திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

News image
Updated On :14 மே 2026, 6:11 am IST

குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுவது குறித்து முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் பேரவையில் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வா் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். அதை வரவேற்கிறேன். முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் சிறப்புக் காவல் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது மக்களால் வரவேற்கப்பட்டது. மீனவா்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.

தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சி என முதல்வா் விஜய் பதவியேற்கும்போது கூறினாா். ஆனால், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு வந்தவா் யாா் என்று பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. இது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்வா் பேச வேண்டும்.

முதல்வரின் அரசியல் பிரிவில் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது ஏற்புடையதல்ல. இளைஞா்கள் நம்பிக்கையில் வாக்களித்து இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைப்பட்டால் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு விசிக, இடதுசாரிகள், மஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்களும் பேரவையில் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.