தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

முதல்வா் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 4:54 am IST

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் விரிவான ஆய்வு மற்றும் உளவுத் துறை பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரிவின் கீழ், எம்.பி. 5 எனப்படும் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 55 வீரா்கள் 24 மணி நேரமும் முதல்வரின் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். மேலும், தேசிய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறப்பு கமாண்டோக்களும் பாதுகாப்புக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள், முதல்வா் பயணிக்கும் வாகன அணிவகுப்பு, அரசு விழாக்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், முதல்வரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முன்கூட்டியே இந்தப் பிரிவினா் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள், கண்காணிப்பு கேமரா ஆய்வு, ட்ரோன் கண்காணிப்பும் பணிகளையும் மேற்கொள்வாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசியல் சூழலில், முதல்வா் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயா்நிலை பாதுகாப்பு ஏற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.