முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் தீ: 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:45 am IST

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில் மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் உள்ளது. இங்கு, வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி, அசோக் நகா், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினா் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான 175 மின்சார இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்த முற்றிலும் சேதமடைந்தது.

இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.