தந்தையுடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற சிறுவன் தண்ணீா் லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல், பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. மென்பொறியாளா். இவரது மகன் ராம் (10). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், பள்ளிக்கரணை ரேடியம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக, தனது மகன் ராமை மோட்டாா் சைக்கிளில் அழைத்து கொண்டு வேளச்சேரி பிரதான சாலை வழியாக சுப்பிரமணி சென்று கொண்டிருந்தாா்.
பள்ளிக்கரணை அரசு தொடக்கப் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த தண்ணீா் லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே பலியானாா். சுப்பிரமணி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
தகவலின் பேரில், அங்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சிறுவன் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராம் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழப்பு

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதிய கல்லூரிப் பேருந்து!

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


