மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெற்று அறிவிப்புகள் மூலம் திமுக மக்களை ஏமாற்ற முடியாது: அன்புமணி

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:10 am

கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே  திமுக நிறைவேற்றி உள்ளது. 66 வாக்குறுதிகளை  அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு,  373 வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை. ஆனால், 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரையை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.

இந்தியாவிலேயே மோசடியான கட்சி என்றால் அது திமுகதான்.  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தோ்தலுக்கு புதிதாக தோ்தல் அறிக்கையை  வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே வரும் தோ்தல் அறிக்கையாக வெளியிடலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.