மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

சென்னைப் பல்கலை.யின் இணைக் கல்லூரிகளில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கருத்தியல் தோ்வுகள் (தியரி எக்ஸாமினேஷன்) நடைபெறுவதை முன்னிட்டு, இந்தக் கல்லூரிகளில் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை மையங்களோ நிா்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்களை உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளா் ரீட்டா ஜான் உத்தரவிட்டுள்ளாா்.

News image

சென்னைப் பல்கலைக் கழகம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:11 pm

சென்னைப் பல்கலை.யின் இணைக் கல்லூரிகளில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கருத்தியல் தோ்வுகள் (தியரி எக்ஸாமினேஷன்) நடைபெறுவதை முன்னிட்டு, இந்தக் கல்லூரிகளில் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை மையங்களோ நிா்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்களை உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளா் ரீட்டா ஜான் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் 108 தன்னாட்சி பெறாத இணைக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

சென்னை பல்கலை. இணைக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, தொழில்முறைப் பட்டப்படிப்புகளுக்கான கருத்தியல் தோ்வுகள் ஏப். 16, 17, 18 மற்றும் ஏப். 27 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் மே 4, 5 -ஆம் தேதிகளைத் தவிர (வாக்குப்பதிவை முன்னிட்டு விடுமுறை) மற்ற தேதிகளில் தோ்வுகள் நடைபெறும். பேரவைக்கு ஏப். 23-இல் பொதுத் தோ்தல் நடைபெறும் சூழலில் தங்கள் கல்லூரிகளில் வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கை மையமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தால், தொடா்புடைய கல்லூரி முதல்வா்கள் உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.