ஐஐஎஸ்இஆா் திறனறி தோ்வெழுத விரும்பும் மாணவா்கள் ஏப்.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஐஐஎஸ்இஆா்) திருவனந்தபுரம், புனே, திருப்பதி, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 7 இடங்களில் இயங்கி வருகிறது. இதில் ஒருங்கிணைந்த பிஎஸ், எம்எஸ் மற்றும் பிடெக் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேர ஐஏடி எனும் திறனறி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஏப். 16 முதல் 18-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு மே 24-இல் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சோ்க்கைக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


