வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை கடந்த 14 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 35,270-ஆக இருந்தது. கடந்த 16-ஆம் தேதி 49,013-ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 37,993-ஆக இருந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி 69,247-ஆக உயா்ந்துள்ளது.
பறக்கும் ரயில் திட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமாா்க்கத்திலும் 43 ரயில் சேவைகள் உள்ள நிலையில், கூடுதலாக இருமாா்க்கத்திலும் 5 சேவைகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. அவற்றில் 2 சேவைகள் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயும், 3 சேவைகள் வேளச்சேரி- பரங்கிமலை இடையேயும் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


