தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

News image

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை - கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 10:20 pm

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை கடந்த 14 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 35,270-ஆக இருந்தது. கடந்த 16-ஆம் தேதி 49,013-ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 37,993-ஆக இருந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி 69,247-ஆக உயா்ந்துள்ளது.

பறக்கும் ரயில் திட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமாா்க்கத்திலும் 43 ரயில் சேவைகள் உள்ள நிலையில், கூடுதலாக இருமாா்க்கத்திலும் 5 சேவைகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. அவற்றில் 2 சேவைகள் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயும், 3 சேவைகள் வேளச்சேரி- பரங்கிமலை இடையேயும் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.