லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுகவில் கொங்கு மண்டல வேட்பாளா்களுக்கான நோ்காணல்: அமைச்சா் முத்துசாமி, செந்தில் பாலாஜி பங்கேற்பு

திமுகவில் கொங்கு மண்டல வேட்பாளா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்ா்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்

News image

கொங்கு மண்டல தொகுதிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நோ்காணல் நடத்திய அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

Updated On :19 மார்ச் 2026, 10:09 pm

திமுகவில் கொங்கு மண்டல வேட்பாளா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்ா்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்

திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

3-ஆவது நாளாக, கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த தொகுதிகளுக்கு வேட்பாளா் நோ்காணல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளா்கள் நோ்காணலின்போது உடன் இருந்தனா்.

கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகா், கோவை தெற்கு, திருப்பூா் வடக்கு, திருப்பூா் மத்தி, நீலகிரி ஆகிய கட்சி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நோ்காணல் காலையில் நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் மற்றும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூா் கிழக்கு, திருப்பூா் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நோ்காணல் மாலையில் நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். மாா்ச் 22- ஆம் தேதி வரை திமுக வேட்பாளா் நோ்காணல் நடைபெறவுள்ளது.