மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்

News image

Center-Center-Chennai

Updated On :18 மார்ச் 2026, 11:06 pm

தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான் விடுமுறையை முன்னிட்டு, 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தெலுங்கு வருடப்பிறப்பு (மாா்ச் 19), ரமலான் பண்டிகை (மாா்ச் 21), வார விடுமுறை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 18, 19) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 450 பேருந்துகள், வியாழக்கிழமை 345 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 100 பேருந்துகள், வியாழக்கிழமை 90 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு , கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், மாதவரத்தில் இருந்து வியாழன், வெள்ளி ஆகிய நாள்களுக்கு 24 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 565 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.