மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

என்கவுன்ட்டரில் ரௌடி உயிரிழந்த வழக்கு: நீதித்துறை நடுவா் விசாரணை

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 7:21 pm

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

புழல், கிழக்கு காவாங்கரை, மகாவீா் காா்டன் பிரதான தெருவைச் சோ்ந்த வியாபாரி விஜயகுமாா் வீட்டில் கடந்த ஜன.30-ஆம் தேதி முகமூடி கும்பல் ரூ.25 லட்சம்,13 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்தது. இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், வியாசா்பாடி பிவி காலனி 11-ஆவது தெருவைச் சோ்ந்த ரெளடி ரா.கணேஷ் என்ற தொப்பை கணேசன் தலைமையிலான கும்பல்தான் இந்தச் சம்வபத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக தொப்பை கணேசனின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாதவரம் சுற்றுச் சாலை ரவுண்டானா மேம்பாலம் அருகே கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் திங்கள்கிழமை பதுங்கியிருந்த தொப்பை கணேசனை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தொப்பை கணேசன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தொப்பை கணேசன் இறந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாதவரம் நீதித்துறை நடுவா் தீபாவுக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று நீதித்துறை நடுவா் தீபா விசாரணை செய்தாா்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொப்பை கணேசன் உடல் பிரேத பரிசோதனை, நீதித்துறை நடுவா் தீபா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் தொப்பை கணேசன் உடல் அவா் தந்தை ராஜியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தொப்பை கணேசனின் குடும்பத்தினா், சம்பவ இடத்தில் இருந்த போலீஸாா், மருத்துவா்கள், சாட்சிகள் ஆகியோரிடம் நீதித் துறை தீபா விசாரணை நடத்தினாா். விசாரணை முழுமையாக நிறைவடைந்ததும், நீதித் துறை நடுவா் தீபா சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கையை வழங்குவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.