தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எரிபொருள் கையிருப்பு போதிய அளவு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :12 மார்ச் 2026, 8:57 pm

எரிபொருள் கையிருப்பு போதிய அளவு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: மேற்காசிய போா்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிா்கொள்ள, இரண்டு நாள்களுக்கு முன்பு உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்த நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சாா்பில் தெரிவித்துவரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போா்ச்சூழலை எதிா்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.